News February 4, 2026

குமரி: கழிவுகளை கொட்ட வந்ததால் ரூ.1 லட்சம் அபராதம்

image

குழித்துறை நகராட்சி ஆணையர் சுபஸ்ரீ, தாலைவர் பொன் ஆசைத்தம்பி ஆகியோரின் ஆலோசனைப்படி நேற்று சுகாதார அதிகாரிகள் மார்த்தாண்டம் மேம்பாளத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கண்டெய்னர் லாரியில் கடும் துர்நாற்றம் வீசிய நிலையில் அதை சோதனையிட்டனர். அதில், கேரளாவில் இருந்து மீன் கழிவுகளை குமரியில் கொட்ட வந்தது தெரியவந்த நிலையில் லாரியை பறிமுதல் செய்து ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

Similar News

News February 7, 2026

குமரி : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

குமரி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. <>pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News February 7, 2026

குமரி: மாமனார், மைத்துனரை அரிவாளால் வெட்டிய மருமகன்

image

நாகர்கோவிலை சேர்ந்த தம்பதி விபின்லால் – அஸ்வினி. இவர் மீது காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளது. இதனால் பிரிந்து சென்ற மனைவியை குடும்பம் நடத்த அழைத்த நிலையில் அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த விபின் தனது நண்பர்கள் 6 பேருடன் தோப்பூரில் அவரது வீட்டிற்கு சென்று அஸ்வினி, அவரது தந்தை (ம) மைத்துனரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினர். இதுகுறித்த புகாரில் அஞ்சுகிராமம் போலீசார் விபின்பாலை தேடி வருகின்றனர்.

News February 6, 2026

குமரி: பைக் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி

image

இரணியல் பாறைக்காவிளையை சேர்ந்தவர் டிரைவர் ரெதீஸ் (33). மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். ரெதீஷ் நேற்று மாலை பைக்கில் நாகர்கோவில் சென்று விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். சுங்கான்கடை அருகே வந்தபோது, பின்னால் வந்த கேரள கார், பைக்கின் பின்புறம் மோதியதில், தலையில் காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!