News February 4, 2026
விழுப்புரம் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

தாம்பரத்தில் இருந்து காலை 9. 40 மணிக்கு விழுப்புரம் செல்லும் மெமுரயில் திண்டிவனம் – மயிலம் ரயில் நிலையங்களுக்கிடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக பிப்ரவரி 5 ,7, 10 ஆகிய தேதிகளில் திண்டிவனத்துடன் நிறுத்தப்படும். அதேபோல் விழுப்புரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு மதியம் 1:30 மணிக்கு செல்லும் ரயில் விழுப்புரத்திற்கு பதிலாக திண்டிவனத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 6, 2026
விழுப்புரம் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

விழுப்புரம்: முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து 1,500 மெட்ரிக் டன் யூரியா உரங்கள் வந்தடைந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது பயிர்களுக்கு தேவையான உரங்களான யூரியா 6284 மெ.டன், டி.ஏ.பி. 2322 மெ.டன், பொட்டாஷ் 1502 மெ.டன், காம்ப்ளெக்ஸ் 9077 மெ.டன், சூப்பர் பேட் 1919 மெ.டன், 1500 மெ.டன் யூரியா உர மூட்டைகள் சரக்கு ரயில்கள் மூலம் வந்தடைந்தன.
News February 6, 2026
விழுப்புரத்தில் அரசு வழங்கும் இலவச வீடு! DONT MISS

விழுப்புரம் மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <
News February 6, 2026
விழுப்புரம்: மனைவி திட்டியதால் தற்கொலை!

பள்ளியத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன்(28). விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ஷகிலா(27) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. இந்நிலையில், சம்பவத்தன்று குடி போதையில் வந்த தமிழரசனுக்கும் மனைவிக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த தமிழரசன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


