News February 4, 2026

ராமநாதபுரத்தில் 461 பேர் அதிரடி கைது

image

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று (பிப்.3) சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க துணை தலைவர் தனலட்சுமி இதற்கு தலைமை தாங்கினார். இதில், ஓய்வூதியம், அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட முயன்றனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட 461 பேரை போலீசார் கைது செய்து நேற்று மாலை விடுவித்தனர்.

Similar News

News February 14, 2026

இராமநாதபுரம் ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

image

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.

1.ராமநாதபுரம்- 9445000363

2.ராமேஸ்வரம்- 9445000364

3.திருவாடானை- 9445000365

4.பரமக்குடி- 9445000366

5.முதுகுளத்தூர்- 9445000367

6.கடலாடி- 9445000368

7.கமுதி- 9445000369

*அலுவலக நேரத்தில் மட்டும் அழைக்கவும்* இந்த தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News February 14, 2026

இராமநாதபுரம்: கொலை குற்றவாளிகள் சரண்!

image

ராமநாதபுரம் கான்சாகிப் தெருவை சேர்ந்தவர் கமால் முஸ்தபா மகன் செய்யது அப்துல்லா(31). இவரை 2025 மே.17ம் தேதியன்று சிலர் காரில் கடத்திச் சென்று கொலை செய்தனர். இவ்வழக்கில் 5 பேர் கைதான நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கை சி.பி.சி.ஐ.டி,க்கு மாற்றியது. இதையடுத்து தலைமறைவாக இருந்த 6 பேரில் இருவர் சரணடைந்தனர். மேலும் இருவர் நேற்று சரணடைந்தனர்.

News February 14, 2026

இராம்நாடு: சிறுமிக்கு பாலியல் தொல்லை; 20 ஆண்டுகள் சிறை

image

திம்மநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமிக்கு கடந்த 2023ம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த செல்வ பெருமாள் பாலியல் தொல்லை அளித்ததாக வழக்கு கமுதி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கு மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற வந்தது. இந்நிலையில் பாலியல் தொல்லை அளித்த இளைஞர் செல்வபெருமாளுக்கு 20 வருடம் சிறை தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து நேற்று நீதிபதி கவிதா உத்தரவிட்டார்.

error: Content is protected !!