News May 9, 2024
குரூப் – 2 தேர்வு மே 15 முதல் கலந்தாய்வு

ஒருங்கிணைந்த குருப்-2 தேர்வு பணிகளுக்கான முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நிலையில், ஏப்.8இல் மதிப்பெண், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னையில் மே 15 முதல் ஜூன் 20-ம்தேதி வரை நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதற்கான அழைப்பாணையை தேர்வாணைய இணையத்தில் பெறலாம். இதில், கலந்துக்கொள்ள தவறினால் மறு வாய்ப்பு வழங்கப்படாது.
Similar News
News November 20, 2025
நகைக் கடன்… மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகளில் <<18334761>>1 கிராம் தங்கத்துக்கு ₹7,000<<>> கடன் வழங்கும் நடைமுறை நவ.17 முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இந்தாண்டு, ஏப்ரல் – அக்டோபர் வரை 42 லட்சம் பேருக்கு சுமார் ₹45,000 கோடி நகைக் கடன் வழங்கப்பட்டிருப்பதாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தெரிவித்துள்ளார். தற்போது, நகைக்கான கடன் தொகை உயர்த்தப்பட்டிருப்பது மேலும் லட்சக்கணக்கானோருக்கு பலனளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 20, 2025
நல்லா சாப்பிட்டாலும் குழந்தை ஒல்லியாவே இருக்கா?

குழந்தைகள் கண்ட கண்ட இடங்களில் விளையாடிவிட்டு கையை முறையாக கழுவாமல் உணவு சாப்பிடுகின்றனர். இதனால் அவர்கள் வயிற்றுக்குள் கிருமிகள் ஈஸியாக நுழையும். இதனால் வயிற்றில் புழுக்கள் உருவாகி அவர்கள் என்ன சாப்பிட்டாலும் அது உடலில் ஒட்டாமல் போகலாம். எனவே, வாரத்திற்கு ஒருமுறை பாகற்காய் ஜூஸ் குடிப்பதை பழக்கப்படுத்துங்கள். அல்லது தினமும் பாலில் மஞ்சள் கலந்து குடிக்கவைக்கலாம். SHARE.
News November 20, 2025
விஜயகாந்த் மரணம்.. வடிவேலு முதல்முறை கண் கலங்கினார்

விஜயகாந்த் மறைவின்போது வடிவேலு செல்லாதது விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில், கேப்டன் மறைவின் போது சென்றிருந்தாலும், அவரை இப்படி திட்டிவிட்டு எதற்காக இப்போது வந்தார் என கேட்டிருப்பார்கள் என வடிவேலு வருத்தத்துடன் பகிர்ந்ததாக நடிகர் குரு லக்ஷ்மன் கூறியுள்ளார். விஜயகாந்த் சொர்க்கத்தில் தான் இருப்பார் என்று கூறி, வடிவேலு கண் கலங்கியதாகவும் உருக்கமாக அவர் தெரிவித்துள்ளார்.


