News February 4, 2026
வக்கீலாக மாறும் CM மம்தா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட SIR பணிகளின் அடிப்படையில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இது பாஜகவின் சதி என சாடும் அம்மாநில CM மம்தா பானர்ஜி, சுப்ரீம் கோர்ட்டில் SIR மற்றும் ECI-க்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில், அவரே நேரில் ஆஜராகி வாதாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுப்ரீம் கோர்ட் வரலாற்றில் சிட்டிங் CM ஒருவர் வழக்கில் வாதாட இருப்பது இதுவே முதல்முறையாகும்.
Similar News
News February 12, 2026
பிப்ரவரி 12: வரலாற்றில் இன்று

*1502 – வாஸ்கோடகாமா தனது இரண்டாவது இந்திய வருகைக்காக லிஸ்பனில் இருந்து தனது கப்பலில் புறப்பட்டார்.
*1928 – காந்தி பர்தோலியில் சத்தியாக்கிரகத்தை அறிவித்தார்.
*1923 – முதல் திமுக பெண் அமைச்சர் சத்தியவாணி முத்து பிறந்த தினம்
*1809 – ஆபிரகாம் லிங்கன் பிறந்த தினம்
*2001 – மனித மரபணுவின் முதல் வரைவு மற்றும் அதன் ஆரம்ப பகுப்பாய்வு நேச்சர் இதழில் வெளியானது * தேசிய உற்பத்தித்திறன் தினம்
News February 12, 2026
ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: கிரண் ரிஜிஜு

பட்ஜெட் விவாதத்தில் ராகுல் உருப்படியான எந்த கருத்துகளையும் முன்வைக்கவில்லை என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விமர்சித்துள்ளார். இந்தியா மற்றும் இந்தியர்களின் நலன்களை பிரதமர் விற்றுவிட்டார் என உள்நோக்கத்துடன் பொய் கூறிய ராகுல், மத்திய அமைச்சர் பதில் அளித்ததை கூட கேட்காமல் அவையை விட்டு ஓடி விட்டார். இது மரபு இல்லை எனக் கூறிய ரிஜிஜு, ராகுலுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்புவோம் என்றார்.
News February 12, 2026
தேமுதிகவுடன் கூட்டணி பேச்சா? நயினார் ரியாக்ஷன்

தேமுதிகவுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக திண்டுக்கல் சீனிவாசன் நேற்று தெரிவித்திருந்தார். இதுகுறித்த கேள்விக்கு, இதுவரையிலும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று நயினார் பதிலளித்துள்ளார். சுதீஷ் தன்னுடைய நல்ல நண்பர், அதன் அடிப்படையில் பேசினேன், கூட்டணி தொடர்பாக பேசவில்லை எனக் கூறிய அவர், PM மோடி மார்ச் 1-ல் வருகிறார், அதற்குள் நல்லது நடக்கலாம் என்று சூசகமாக தெரிவித்துள்ளார்.


