News May 9, 2024
கேஸ் இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கேஸ் இணைப்பு பெற்றுள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களுடைய கேஸ் இணைப்பு ஆவணங்களை சரி பார்க்கும் பொருட்டு தாங்கள் இணைப்பு பெற்றுள்ள கேஸ் ஏஜென்சி நிறுவனத்திற்கு சென்று தங்களுடைய கைரேகையை பதிவு செய்து உறுதி செய்து கொள்ளுமாறு கேஸ் ஏஜென்சி நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Similar News
News January 12, 2026
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு எச்சரிக்கை!

தி.மலை மாநகராட்சிப் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாகச் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க, கலெக்டர் உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2முறைக்கு மேல் பிடிபடும் மாடுகளைப் பொது ஏலத்தில் விடவும், உத்தரவிடப்பட்டதுள்ளது.
News January 12, 2026
வந்தவாசியில் பயங்கரம்!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களைத் தட்டிக்கேட்ட பத்திர எழுத்தர் இந்திரன் என்பவரை, அந்த கும்பல் கத்தியால் வெட்டியது. இதில் காலில் பலத்த காயமடைந்த இந்திரனுக்கு, வந்தவாசி அரசு மருத்துவமனையில் 18 தையல்கள் போடப்பட்டன. இதுகுறித்து பொன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
News January 12, 2026
திருவண்ணாமலையில் துடிதுடித்து பலி!

போளூர் அருகே, மட்டபிறையூரிலிருந்து மொடையூர் கிராமத்திற்கு பைக்கில் திரும்பிக்கொண்டிருந்த நண்பர்கள் விஜய் (25) மற்றும் விக்னேஷ் (16) ஆகிய இருவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போளூர் போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


