News February 4, 2026
விழுப்புரம் இரவு ரோந்து பணி விவரம்

விழுப்புரம் மாவட்ட காவல் துறையின் அறிவிப்பின்படி, இன்று இரவு ரோந்து பணிக்காக மாவட்டத்தின் பல்வேறு உட்கோட்டங்களில் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து நடைபெறும். அவசர உதவிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம்.
Similar News
News February 20, 2026
விழுப்புரம்: தூக்கில் தொங்கிய பெண்!

மோனிஷா சிங்கப்பெருமாள்கோயிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நெடுங்கல் கிராமத்தில் கணவர் வீட்டில் இருந்து வந்த மோனிஷாவிடம் மாமனார் விநாகயம், மாமியார் காஞ்சனா மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் ரூ.1 லட்சம் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தி வீட்டிலிருந்து வெளியேற்றிவிட்டனர். இதனால், திண்டிவனம் சலவாதியில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த மோனிஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
News February 20, 2026
விழுப்புரம்: டிராக்டர் கவிழ்ந்து கோர விபத்து

விழுப்புரம், பாலப்பட்டு கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் விறகுகளை ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது. திண்டிவனத்திலிருந்து நேற்று விறகுகளை ஏற்றுக்கொண்டு டிராக்டர் விக்கிரவாண்டி நோக்கி சென்றது. இதில் விபத்தில் காயமடைந்த டிராக்டர் டிரைவர் மணிகண்டன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
News February 20, 2026
விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் அறிவித்துள்ள செய்திக் குறிப்பில், மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கயிலில், நாளை (21.02.2026) அன்று நடைபெற உள்ள திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு (21.02.2026) (சனிக்கிழமை) ஒரு நாள் மட்டும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும், உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


