News February 3, 2026
விருதுநகர்: DRO வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளி திருட்டு..!

விருதுநகர் NGO காலனியைச் சேர்ந்த நித்தியா, கோவையில் நில அளவைப் பிரிவில் DRO வாக பணிபுரிந்து வருகிறார். தைப்பூசத்தை முன்னிட்டு மருதமலை முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய, கடந்த ஜன.31 ம் தேதி சென்றுள்ளார். நேற்று காலை வீட்டிற்கு திரும்பி வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 11, 2026
விருதுநகர்: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள் இந்த <
News February 11, 2026
விருதுநகரில் மட்டுமே கிடைக்கும்…அதிசயம்!

விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமே மானாவாரி பகுதிகளில் மழைக்காலத்தில் அதலைக்காய் செழிப்பாக வளர்ந்திருப்பதைக காணலாம். இதில் பல மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது. குழந்தைகளின் குடற்புழுக்களை நீக்கம் செய்வதற்கு இது மிகச் சிறந்த மருந்தாகும். சமீப காலமாக இதன் விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் பிற மாவட்ட மக்களும் இதனை சமையலுக்குப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஷேர் பண்ணுங்க
News February 11, 2026
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருவர் தற்கொலை

ஸ்ரீவி, கொத்தன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மனைவி பெருமாளம்மாள் கண்டித்துள்ளார். இதனால் அடிக்கடி செத்து விடுவேன் என்று சொல்லியுள்ளார். இந்நிலையில், பெருமாளம்மாள் மகளை விடுவதற்கு சென்றிருந்த நிலையில், மாரியப்பன் காட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வன்னியம்பட்டி போலீசார் பெருமாளம்மாளின் புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


