News May 9, 2024

தந்தையை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொன்ற மகன் 

image

ஒத்தக்கடை அருகே உறங்கான்பட்டியை சேர்ந்தவர் செல்லபாண்டி(41). இவரது மனைவி சத்தியா. செல்லபாண்டி மனைவியை பிரிந்து வேறொரு பெண்ணோடு வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. செல்லபாண்டி அடிக்கடி வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாகவும் இதனால் ஆத்திரமடைந்த அவரது 17 வயது மகன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து நேற்று இரவில் தந்தையை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார். சிறுவனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Similar News

News September 13, 2025

மதுரையில் முதல் கிரிக்கெட் மைதானம் இங்கு தான்

image

மதுரை மாவட்டத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும் என கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறார்கள், இந்த நிலையில் மதுரை சிந்தாமணி பகுதியில் பிரபல தனியார் கல்வி நிறுவனம் பிரம்மாண்டமாக கிரிக்கெட் மைதானம் கட்டுமான பணி தொடங்கிய நிலையில் தற்போது பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது விரைவில் திறப்பு விழா காண இருப்பதாக அறிவிப்பு தெரியாதவர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News September 12, 2025

மதுரை மாநகர் காவல்துறையின் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று இரவு நேரங்களில் ரோந்து பணிக்கு செல்லும் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். தங்கள் குடியிருக்கும் பகுதிகளில் ஏதேனும் இரவு நேரங்களில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை உடனடியாக புகார் தெரிவிக்க காவல் கட்டுப்பாட்டு அறை எண்களுக்கும், காவல் அதிகாரி தொலைபேசி எண்களுக்கும் புகார் அளிக்கலாம்.

News September 12, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று(12.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது அவசர கால எண்டான் 100ஐ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உங்கள் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!