News February 3, 2026
அரியலூர்: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

அரியலூர் மக்களே! இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் அரியலூர் மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். SHARE பண்ணுங்க!
Similar News
News February 7, 2026
அரியலூர்: குற்றவாளி மீது பாய்ந்த குண்டாஸ்

ஜெயங்கொண்டம் சூரியமணல் அருகே கடலூர் மாவட்டம் பாசிகுளம் கிராமத்தை சேர்ந்த கருப்புசாமி என்பவர், கடந்த ஜன.10ம் தேதி விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1.100 கிலோ கஞ்சாவை அரியலூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரை கைது செய்தனர். இந்நிலையில், கருப்புசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிரியா சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி உத்தரவிட்டுள்ளார்.
News February 7, 2026
அரியலூர்: இன்று இங்கெல்லாம் மின்தடை!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர், ஜெயங்கொண்டம், தழுதாழைமேடு ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று ( பிப்ரவரி 7) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெறும் அரங்கோட்டை, கே.வி.குறிச்சி, காடுவெட்டான்குறிச்சி, அணைக்குடம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News February 7, 2026
அரியலூர் மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.6) இரவு 10 முதல் இன்று (பிப்.7) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


