News February 3, 2026
கள்ளக்குறிச்சிக்கு புது பஸ் ஸ்டாண்ட் வந்தாச்சு!

ஏமப்பேர் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள புதிய புறநகர் பஸ் நிலையத்தை அமைச்சர்கள் இன்று(பிப்.3) திறந்து வைக்கின்றனர். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், இந்த புற நகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த பஸ் ஸ்டாண்ட் மக்களுக்கு பயனுள்ளதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News February 20, 2026
கள்ளக்குறிச்சி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News February 20, 2026
கள்ளக்குறிச்சி: 45 செயலாளர்கள் பணியிடை மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் பணியாற்றி வந்த 45 ஊராட்சி செயலாளர்கள், அதிரடியாக திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ச்சியான புகார்கள் பணி சுமை மறுசீரமைப்பு உள்ளாட்சி நிர்வாக மேம்பாடு போன்ற நிர்வாக காரணங்களுக்காக, இந்த பணியிடை மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
News February 20, 2026
கள்ளக்குறிச்சி: தாய் வீட்டிற்கு சென்று வீடு திருமியதும் அதிர்ச்சி!

திருக்கோவிலூர், அத்தண்டமருதூரை சேர்ந்த சக்திவேல் மனைவி வனிதா (45), வீட்டை பூட்டிவிட்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியில் அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


