News February 3, 2026
வேலூர்: தரம் கெட்ட செயலால் வீரர் பணியிடை நீக்கம்!

லத்தேரி பகுதியை சேர்ந்த தீயணைப்பு வீரர் சசிகுமார் (31). இவர் காட்பாடியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் நெருங்கி பழகி, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்த அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காட்பாடி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சசிகுமாரை கைது செய்தனர். இதை தொடர்ந்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேலு சசிகுமாரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டு உள்ளார்.
Similar News
News February 11, 2026
வேலூர்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே கிளிக் செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க
News February 11, 2026
வேலூர்: சீட்டு பிரச்சனையில் அடிதடி முடிவு!

குமரப்பநகரை சேர்ந்த ஏட்டு சிவக்குமார் (45), மாதச்சீட்டு நடத்தி வருகிறார். இதில் அப்பகுதி முன்னாள் ராணுவ வீரர் பத்ரிசேகர் (42 ரூ.5 லட்சம் சீட்டில் சேர்ந்து ரூ.4 லட்ச சீட்டை எடுத்தார். பின் 6 மாதங்களாக சீட்டு கட்டாததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சிவக்குமார், பத்ரிசேகரை தாக்கியுள்ளார். இதன் பேரில் சிவக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 11, 2026
வேலூர்: தீயில் கருகிய டீ மாஸ்டர்!

எம்.வி.குப்பத்தை சேர்ந்த ஜெயக்குமார் (43), ஆந்திராவில் டீ மாஸ்டர் வேலை செய்து வந்தார். இவர் 2-ந் தேதி தனது அண்ணன் வீட்டிற்கு வந்துள்ளார். பின் 8-ந் தேதி இரவு மது போதையில் வீட்டில் மாடியில் பீடி குடிக்க தீக்குச்சியை பற்ற வைத்து விட்டு அணைக்காமல் தூங்கி உள்ளார். இதில் ஏற்பட்ட தீ விபத்தில் ஜெயக்குமார் தீயில் கருகி படுகாயமடைந்த இவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


