News February 3, 2026

அரியலூர்: வாகன ஏலம் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட 44 இருசக்கர வாகனங்கள் வருகிற பிப்.12ம் தேதி அன்று பொது ஏலம் விடப்படவுள்ளது. அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் இந்த ஏலமானது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா சாஸ்திரி முன்னிலையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 14, 2026

அரியலூர்: முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர் கூட்டம்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களிடமிருந்து அவர்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் கேட்கப்பட்டதுடன் அவர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 11 மனுக்கள் பெறப்பட்டது. மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

News February 14, 2026

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை சார்பில், பொதுமக்களுக்கு போதைப் பொருட்களால் ஏற்படும் விளைவு குறித்த கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர் ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா சாஸ்திரி உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ் செல்வன், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கலை நிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

News February 14, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.13) இரவு 10 முதல் இன்று (பிப்.14) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!