News February 3, 2026

இராமநாதபுரத்தில் ரூ. 2 கோடி கஞ்சா சிக்கியது எப்படி?

image

ராமநாதபுரம் பட்டினம்காத்தான் பகுதியில் Q பிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையில், இலங்கைக்கு கடத்த முயன்ற 194 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து கார் மூலம் கொண்டு வரப்பட்ட இதன் மதிப்பு ரூ. 2 கோடியாகும். இதுதொடர்பாக கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மணிகண்டன் கைது செய்யப்பட்டார். ராமேஸ்வரம் வழியாக இதை கடத்த திட்டமிட்டது விசாரணையில் அம்பலமானது. தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News

News February 8, 2026

ராமநாதபுரம்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

ராமநாதபுரம் மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். SHARE

News February 8, 2026

ராமநாதபுரம்: ரூ.15,000 கோடி கடன் வழங்க இலக்கு

image

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வங்கியாளர்களுக்கான மாவட்ட ஆலோசனை குழு கூட்டத்தில் 2026 – 27 ஆம் ஆண்டின் முன்னுரிமை துறைகளுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையினை ஆட்சியர் வெளியிட்டார். அதன்படி நுண், சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடன் ரூ.1,351 கோடி, பிற முன்னுரிமை துறைகளுக்கு ரூ.1,771 கோடி, வேளாண்மைக்கு ரூ.12,200 கோடி கடன் வழங்க மதிப்பிடப்பட்டுள்ளது.

News February 8, 2026

இராமநாதபுரம் மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (பிப்.07) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!