News February 2, 2026
மீண்டும் சாதித்து காட்டிய சென்னை மருத்துவமனை!

சென்னை, மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவால் பாதிக்கப்பட்ட மருத்துவ கல்வி மாணவி ஒருவர், அதிநவீன நரம்பியல் சிகிச்சைக்காக கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் குணமடைந்த நிலையில், மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். இதில் மருத்துவமனையின் முதல்வர் & மருத்துவர்கள் உடன் இருந்தனர்.
Similar News
News February 12, 2026
சென்னை: நீங்களும் ஐஸ்கிரீம், பேக்கரி கடை வைக்கலாம்

ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் வரும் 19, 20 ஆகிய தேதிகளில் காலை 9:30 முதல் மாலை 6 மணி வரை ஐஸ்கிரீம், பிஸ்கட், பன், பப்ஸ், கேக் தயாரிப்பது சந்தைப்படுத்துவது குறித்த பயிற்சி வழங்கப்பட உள்ளது. 10 வகுப்பு தகுதியுடையோர் பயிற்சி கலந்து கொள்ளலாம். விவரங்களுக்கு 8668102600 என்ற எண்ணை அழைக்கலாம். சுய தொழில் தொடங்க செம்ம வாய்ப்பு. ஷேர் பண்ணுங்க.
News February 12, 2026
சென்னை: மனைவியை ஓட ஓட கத்தியால் குத்திய கணவன்!

செம்மஞ்சேரியை சேர்ந்த சதீஷ். மனைவி தேவி (27). தேவியின் நடத்தையில் சதீஷ் சந்தேகம் அடைந்ததால் தேவி அவரது சகோதரி வீட்டில் வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு, ஓ.எம்.ஆர்., காரப்பாக்கம், பேருந்து நிறுத்தம் நோக்கி தேவி நடந்து சென்றார். அப்போது, எதிரே வந்த சதீஷ். மறைத்து வைத்திருந்த கத்தியால் ஓட ஓட தேவியை குத்தினார். புகாரின் பேரில் கண்ணகி நகர் போலீசார் சதீஷை நேற்று கைது செய்தனர்.
News February 12, 2026
சென்னை: பட்டப்பகலில் துணிச்சல்; அடித்து உதைத்த மக்கள்!

சென்னை கிண்டி மெட்ரோ ரயில் அருகில் உள்ள பழக்கடையில், தோழியுடன் ஜூஸ் குடித்த பெண்களிடம் இருவர் பட்டப்பகலில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் ஒருவரான தளபதி (34) என்பவரை பிடித்து தர்ம அடி கொடுத்து அக்கம் பக்கத்தினர் கிண்டி போலீசாரிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் தப்பி ஓடிய உதயகுமார்(39), என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


