News February 2, 2026
கிரிவலம் முடிந்து தூய்மை பணிகள் தீவிரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலையில் தை மாத பௌர்ணமி கிரிவலம் நேற்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து, கிரிவலப் பாதைகளில் துப்புரவு பணியாளர்கள் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்று (பிப்.02) ஆட்சியர் க.தர்ப்பகராஜ் கிரிவலப் பாதைகளை நேரில் பார்வையிட்டு, துப்புரவு பணிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News February 4, 2026
தி.மலை கலெக்டர் அறிவித்தார்!

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவிலான தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம் வருகிற பிப்.9ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், மத்திய அரசு நிறுவனங்கள், மாவட்ட மின் உற்பத்தி, அரசு போக்குவரத்து கழகம், செய்யாறு சர்க்கரை ஆலை போன்ற அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றனர். www.apprenticeshipindia.gov.in என்ற தளத்தில் பதிவு செய்யலாம், என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News February 4, 2026
தி.மலை: மின்சார வாரியம் ஷாக்! பேரூராட்சி ராக்!

தி.மலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் மின்கமத்துடன் சேர்த்து வணிக வளாகத்திற்கு கான்கேர்ட் போட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கீழ்பென்னாத்தூர் காவல் நிலையம் அருகில் பேரூராட்சி சார்பில் இரண்டு வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. கட்டிடத்தின் குறுக்கே மின்கம்பம் செல்வதால் அதோடு சேர்த்து கான்கேர்ட் போட்ட சம்பவம் ‘நீங்க வேற லெவல் சார்’ என்று சொல்லும்படி உள்ளதாக கிண்டல் அடித்து வருகின்றனர்.
News February 4, 2026
தி.மலை: பள்ளிக்கு சென்ற வேன் விபத்து- துடிதுடித்து பலி!

திருவண்ணாமலை அடுத்த திடீர் குப்பம் கிராமத்தில் நேற்று திருவண்ணாமலை நோக்கி சென்ற தனியார் பள்ளி வாகனம் மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


