News February 2, 2026

தென்காசி: அடுத்தடுத்து கார் மோதி இருவர் பலி

image

பாடத்தூர் பகுதியை சேர்ந்த கண்ணன் (45) என்பவர் சனிக்கிழமை இரவு பாட்டத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற போது அதை ஊரை சேர்ந்த முருகேசன் (28) என்பவர் ஓட்டி வந்த கார் கண்ணன் மீது மோதியது. பின்னர் மலையான்குளம் நோக்கி டூவீலரில் சென்ற மகேந்திரன் (35) மீதும் மோதியது. படுகாயமடைந்த இருவரும் சங்கரன்கோவில் GH -ல்அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். இதுகுறித்து சங்கரன்கோவில் போலீசார் முருகேசனை கைது செய்தனர்.

Similar News

News February 9, 2026

தென்காசி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

தென்காசி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <>க்ளிக்<<>> செய்து அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 9, 2026

தென்காசி: மின்தடை பகுதிகள் அறிவிப்பு.!

image

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் மற்றும் நாரணாபுரம் துணைமின் நிலையங்களில் நடக்கும் மின் பராமரிப்பு பணி காரணமாக, நாளை (பிப்.10) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, தரணி நகர், வாசுதேவநல்லூர், சங்குனாபேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல்கட்டும்சேவல், சுப்பிரமணியபுரம், வெள்ளனைகோட்டை, மலையடிகுறிச்சி மற்றும் தாலுகாபுரம் சுற்றுவட்டாரத்தில் மின்தடை ஏற்படும்.

News February 9, 2026

ரூ.1,03,84,380 ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை

image

தென்காசியில் 10 தினங்கள் நடைபெற்ற 4வது பொதிகை புத்தகத் திருவிழாவில் ரூ.1,03,84,380 ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது. தொடர்ந்து 2.ம் ஆண்டின் 1 கோடி ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் விற்பனையாவது மிகப்பெரிய சாதனையாக அமைந்ததை காட்டுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா நடைபெற தொடர்ந்து ஊக்கமளித்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஆட்சியர் கமல் கிஷோர் நன்றி தெரிவித்தார்.

error: Content is protected !!