News February 2, 2026

ஆரணி அருகே துடிதுடித்து பலி!

image

தி.மலை; ஆரணி அடுத்த மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(30), நேற்று முன் தினம் இரவு கிராமத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ராணிப்பேட்டையைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவரான மோகனம்(55) தனது நண்பர் செல்வத்துடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முருகன் மீது பைக் மோதி விபத்திற்குள்ளானது. இதில், அரசு பஸ் டிரைவர் மோகனம் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

Similar News

News February 13, 2026

தி.மலை: துணி வியாபாரி துடுதுடித்து பலி!

image

சென்னையை சேர்ந்த மோகன்(50), துணி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், வெம்பாக்கம் அருகே உள்ள மானாமதியில் வியாபாரம் முடிந்து சென்னைக்கு செல்வ தற்காக காஞ்சீபுரம் – வந்தவாசி சாலை மெயின் ரோட்டில் செய்யாறு தாலுகா மகாஜனபாக்கம் கிராமம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

News February 13, 2026

தி.மலைக்கு வந்த BIG BOSS பிரபலம்

image

திருவண்ணாமலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியால் அறிமுகமான சௌந்தர்யா, நேற்று (பிப்.12) ஆன்மிக தரிசனம் செய்தார். அருள்மிகு அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து, அண்ணாமலை மலைச்சுற்று கிரிவலம் மேற்கொண்டார். அவரைக் கண்ட பக்தர்கள் உற்சாகமாக வரவேற்று செல்ஃபி எடுத்துக் கொண்டனர். எளிமையான தோற்றத்தில் வந்த அவர், பக்தி உணர்வுடன் வழிபட்டது குறிப்பிடத்தக்கது.

News February 13, 2026

தி.மலையில் 800 பேர் கூண்டோடு கைது

image

தி.மலை மாவட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் 9 இடங்களில் நடந்தது. தி.மலை, ஆரணி, சேத்துப்பட்டு போன்ற பல்வேறு இடங்களில் நேற்று இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட சுமார் 800 பேரை போலீ சார் கூண்டோடு கைது செய்தனர். மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்பை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

error: Content is protected !!