News February 2, 2026
ராணிப்பேட்டை: ஓடும் பஸ்சில் விஷம் குடித்த ஜோடி!

வாலாஜாவில் ஜனவரி 31-ஆம் தேதி, பஸ்சில் ஒரு ஆணும் பெண்ணும் மயங்கிய நிலையில் இருந்தனர். இது பற்றி வாலாஜா போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் குடியாத்தத்தை சேர்ந்தவர்கள் என்பதும், திருமணத்தை மீறிய உறவில் இருந்ததும் தெரிந்தது. இது குறித்து ஆட்டோ டிரைவரின் மனைவி ஏற்கனவே அளித்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் கண்டித்துள்ளனர். இந்நிலையில் இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
Similar News
News February 12, 2026
ராணிப்பேட்டை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) ராணிப்பேட்டை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
News February 12, 2026
கலவை: முதுநிலை வருவாய் ஆய்வாளர் திடீர் மரணம்

கலவை வட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக ஆனந்தன் என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு இன்று பிப்ரவரி 12ம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவரை சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தன் பரிதாபமாக இறந்தார். இந்த துயர சம்பவம் வருவாய்த் துறையினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
News February 12, 2026
ராணிப்பேட்டை: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸில் வேலை

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <


