News February 1, 2026

செங்கல்பட்டு: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே இந்த எண்ணிற்கு (181) அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 5, 2026

செங்கை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

செங்கல்பட்டு மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்கலாம். SHARE IT

News February 5, 2026

செங்கல்பட்டு: ஏறி இறங்கிய தண்ணீர் லாரி; துடிதுடித்து பலி!

image

வேளச்சேரியை அடுத்த பெரிய கோவிலம்பாக்கம், கே.பி.ஜி., நகரைச் சேர்ந்தவர் மாதவன் (70). இவர், நேற்று காலை எஸ்.கொளத்துார் பிரதான சாலை வழியாக நடந்து சென்றார். கோவிலம்பாக்கம் குளம் அருகே சென்ற போது, ரிவர்ஸில் வந்த தண்ணீர் லாரி மோதி உயிரிழந்தார். பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் விபத்து ஏற்படுத்திய தண்ணீர் லாரி ஓட்டுநரான மடிப்பாக்கம், ராஜாஜி நகரைச் சேர்ந்த சதீஷ் (33) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

News February 5, 2026

செங்கல்பட்டு: நடுவழியில் பற்றி எரிந்த கார்

image

சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்தவர் கோபி, இவர் நேற்று தனது மனைவியுடன் சென்னையில் இருந்து பொத்தேரி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் செல்லும்போது திடீரென காரின் முன் பக்கத்தில் இருந்து புகை வந்தது. சுதாரித்துக்கொண்ட கோபி காரை விட்டு இறங்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், கார் தீயில் எரிந்த நாசமானது.

error: Content is protected !!