News February 1, 2026

தருமபுரி: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, தருமபுரி பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9600941391-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 10, 2026

தருமபுரியில் சிக்கிய பொட்டலம்; காத்திருந்த அதிர்ச்சி!

image

அனுமன் தீர்த்தம் பகுதியில் அரூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 3 பேர் 6 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் ஒரிசா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி நாமக்கலில் விற்க கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து அரூர் போலீசார் ஊத்தங்கரையை சேர்ந்த சவுந்தர் (20), மணிகண்டன் (24) நாமக்கலை சேர்ந்த சந்துரு (22) ஆகியோரை கைது செய்தனர்.

News February 10, 2026

தருமபுரி: அரசு பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்!

image

சோமனஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் கடந்த 5-ந் தேதி வகுப்பறையில் கணினி ஆய்வக உதவியாளர் தூண்டுதலினால் இரும்பு ஸ்கேலில் மாறி மாறி அடித்துக் கொண்டனர். இதில் காயமடைந்த மாணவர்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் பெற்றோர் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலக்கோடு போலீசார் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பெற்றோர் கலைந்து சென்றனர்.

News February 10, 2026

தருமபுரியில் பயங்கர தீ!

image

ஆலமரத்துப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலையின் குடோனுக்கு நேற்று முன்தினம் (பிப்.8) தொழிலாளி மாசிலாமணி (55) சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு வெடித்ததில் குடோன் தீ பிடித்தது. இதில் அவர் படுகாயமடைந்தார். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் பட்டாசுகளை இருப்பு வைக்க அனுமதியின்றி கோழி பண்ணையை குடோனாக பயன்படுத்திய சக்திவேல் (39) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!