News February 1, 2026

திருப்பத்தூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது VAO வேலையாகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றால், மாவட்ட நிர்வாகத்திடமும் (04179222111), லஞ்சம் கேட்டாலும் (044-22311049) புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 10, 2026

வனத்துறை சார்பில் காட்டு தீ தடுப்பு முன்னெச்சரிக்கை ஆய்வுக்கூட்டம்!

image

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (பிப்.10) வனத்துறை சார்பில் காட்டுத் தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் ஆட்சியர் க. சிவ சௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை டாக்டர் உமா மகேஸ்வரி மற்றும் பலர் உள்ளனர்.

News February 10, 2026

புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை திறந்த எம்.எல்.ஏ.

image

திருப்பத்தூர் அடுத்த, மாடப்பள்ளி கிராமத்தில் புதியதாக கட்டிமுடிக்கப்பட்ட, உள்வட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை இன்று (பிப்.10) திருப்பத்தூர் ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மற்றும், திருப்பத்தூர் எம்.எல்.ஏ நல்லதம்பி ஆகியோர் திறந்து வைத்தனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர், நாராயணன், மற்றும் அதிகாரிகள், உள்ளாட்சி பிரநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

News February 10, 2026

சுகாதார வளாகத்தை திறந்து வைத்த வட்டார வளர்ச்சி அலுவலர்

image

கந்திலி ஒன்றியம் பெரிய கரம் ஊராட்சி அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளியில் சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மக்கள் நல சங்கம் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி மனு அளித்தார். அதன் பேரில் இன்று (பிப். 10) கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பெரியகரம் ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் திறக்கப்பட்டது.

error: Content is protected !!