News February 1, 2026
நாகை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

நாகை மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். இதனை SHARE செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!
Similar News
News February 7, 2026
நாகை: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. இதற்கு, 81888 69996 என்ற எண்ணை SAVE பண்ணுங்க
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்
5. இந்த தகவலை SHARE பண்ணுங்க.!
News February 7, 2026
நாகை: ரூ.49 லட்சம் மோசடி செய்த நபர் அதிரடி கைது

சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி, ஒருவர் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த 13 பேரிடம் ரூ.49 லட்சம் மோசடி செய்ததாக நாகை எஸ்.பி பாலகிருஷ்ணனிடம் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து எஸ்.பி உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடியில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த திருமலை (32) என்ற இளைஞரை கைது செய்தனர்.
News February 7, 2026
நாகை கலெக்டர் கடும் எச்சரிக்கை

நாகை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் நெல் அல்லது வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது. இதனை மீறும் பட்சத்தில் நேரடி நெல் கொள்முதல் பணியாளர்கள் மீதும், நெல் விற்பனை செய்தவர் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் எச்சரித்துள்ளார்.


