News February 1, 2026
மஞ்சூரில் சம்பவம் செய்த கரடி!

உதகை மஞ்சூர் பஜார் பகுதியில் நேற்று அதிகாலை உலவி வந்த கரடி, அங்குள்ள அங்கன் வாடி மையத்தின் முன் பக்க கதவை உடைத்து, உள்ளே நுழைந்தது. பின் உள்ளேயிருந்த டிவி,ஃபேன் போன்ற பொருட்களை சேதப்படுத்தி, மற்றொரு கதவையும் உடைத்து கொண்டு சென்றது. எனவே இப்பகுதி பொதுமக்கள் கரடியை கூண்டு வைத்து பிடிக்குமாறு வனத்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Similar News
News February 12, 2026
நீலகிரி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

நீலகிரியில் வாடகை வீட்டில் குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!
News February 12, 2026
நீலகிரி: ரேஷன் கடை மீது புகாரா? இத பண்ணுங்க!

நீலகிரி மக்களே, ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி ஊழியர்கள் வாங்க சொல்வது (அல்லது) வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறைவாக உள்ளதா? உடனே 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) இங்கு <
News February 12, 2026
நீலகிரி: 80 பேர் அதிரடி கைது

நீலகிரி மாவட்டத்தில், பந்தலூர் வட்டம் சேரங்கோடு கிராமம் சேரம்பாடி பஜாரில் கனரா வங்கிக்கு முன் CITU தொழிற்சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் ராஜன் தலைமையில் சுமார் 80 பேர் மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்கள் அனைவரும் 11.45 மணிக்கு கைது செய்யப்பட்டு, சேரம்பாடி சுங்கம் பகுதியில் உள்ள St. Sebastian Church Hall ல் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.


