News February 1, 2026

விருதுநகர்: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க

Similar News

News February 16, 2026

விருதுநகர்: இனி LINE-ல் நிற்க தேவையில்லை..!

image

விருதுநகர் மக்களே, மின் கட்டணங்களை வரிசையில நின்னு கட்டறீங்களா? இனி அது தேவை இல்லை.. வாட்ஸ் ஆப்-ல மின் கட்டணம் செலுத்த வழி இருக்கு..

1.வாட்ஸ்அப்பில் 9498794987 (TANGEDCO) எண்ணுக்கு Hi-ஐ அனுப்புங்க

2. “Bill Payment” தேர்வு செய்து உங்கள் Consumer Number பதிவு பண்ணுங்க.

3. பில் தொகை சரிபார்த்து, UPI வழியாக பணம் செலுத்துங்க.

4. ரசீது வாட்ஸ்அப்பில் கிடைக்கும்.

இத அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

News February 16, 2026

சிவகாசி: பட்டாசுகளை பதுக்கிய பெண் உட்பட 2 பேர் கைது

image

சிவகாசி அருகே போலீஸ் ரோந்தில் பாரைப்பட்டியில் சஞ்சீவ்பாபு (62) ரூ.4.64 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை பாதுகாப்பின்றி பதுக்கியதற்காக கைது செய்யப்பட்டார். நாரணாபுரத்தில் அனிதா(36) என்பவர் கடை பின்புறம் பேக்கிங் செய்தது தெரியவந்ததை அடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் 57 பெட்டிகளில் இருந்த ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் மற்றும் 2 சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News February 16, 2026

சதுரகிரி மலையேறிய பக்தர் மரணம்

image

மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் சென்ற தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரைச் சேர்ந்த சுடலை (60), மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். வத்திராயிருப்பு தாணிப்பாறை வழியாக ஏறிய அவர் இரட்டை லிங்கம் அருகே மயங்கி விழுந்தார். அவரது உடல் உடற்கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனை அனுப்பப்பட்டது. சாப்டூர் காவல் நிலையம் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

error: Content is protected !!