News February 1, 2026
ராணிப்பேட்டை பொதுமக்கள் கவனத்திற்கு!

தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக அரக்கோணம் – திருத்தணி இடையே இன்று (பிப். 01) சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அரக்கோணத்தில் இருந்து காலை 10:20க்குப் புறப்படும் ரயில் 10:40க்கு திருத்தணி சென்றடையும். மறுமார்க்கமாக, திருத்தணியில் இருந்து 10:50க்குப் புறப்பட்டு 11:15க்கு அரக்கோணம் வந்தடையும். மேலும், கூட்ட நெரிசலைக் குறைக்க மெமோ (MEMU) சிறப்பு ரயில்களும் பயன்பாட்டுக்கு வருகின்றன.
Similar News
News February 5, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்- 2, 2ஏ தேர்வு வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் பெண்கள் கலை கல்லூரியில் 8-ந் தேதி நடை பெறவுள்ளது. தேர்வுக்கான நுழைவுச்சீட்டு <
News February 5, 2026
ராணிப்பேட்டையில் கூண்டோடு கைது!

ராணிப்பேட்டை முத்துகடையில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2-வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. தலைவர் ரவி தலைமையில் நடந்த போராட்டத்தில் மாநில செயலாளர்கள் பங்கேற்று பேசினர். 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட முயன்ற 250-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, மாலை விடுவிக்கப்பட்டனர்.
News February 5, 2026
ராணிப்பேட்டையில் தட்டி தூக்கிய போலீஸ்; 13 பேர் கைது!

தக்கோலத்தில் ஒரு லாட்ஜில் இளைஞர்கள் சிலர் கஞ்சா வைத்திருப்பதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நடைபெற்ற சோதனையில் 13 பேர் கஞ்சாவுடன் கையும் களமுமாக சிக்கினர். இதில் ராணிப்பேட்டையை சேர்ந்த 9 வாலிபர்கள், திருவள்ளூரை சேர்ந்த 3 பேர் மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த துரோன குப்–பன் (67) ஆகியோரை போலீசார் கைது செய்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


