News February 1, 2026
செங்கல்பட்டு தாய்மார்களுக்கு ரூ.11,000

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) மூலம் கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் ரூ.11,000 உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2-வது பெண் குழந்தை என்றால் ரூ.6,000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தை அணுகலாம். அல்லது <
Similar News
News February 16, 2026
செங்கை அருகே 15 பவுன் நகை கொள்ளை

திருப்போரூர் அருகே உள்ள சிறுசேரி பழைய மாமல்லபுரம் சாலை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்வதி (68). இவர் நேற்று முன்தினம் வீட்டில் குடும்பத்துடன் இருந்த போது பீரோ திறந்திருந்து பார்த்துள்ளார்.அப்போது 15 பவுன் நகை திருடுப்போனதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பார்வதி தாழம் பூர் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்
News February 16, 2026
செங்கல்பட்டு: மீனவ மக்களிடையே மோதல்.. போலீஸ் குவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதுப்பட்டினம் மற்றும் உய்யாலி குப்பம் மீனவ மக்களிடையே நேற்று (பிப்.15) கடும் மோதல் ஏற்பட்டது. கோயில் திருவிழா தொடர்பாக கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 6 பேர் காயமடைந்தனர். இந்த மோதலால் மீனவ கிராமத்தில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
News February 16, 2026
செங்கல்பட்டு: அலறிய நர்ஸ்கள்.. சிக்கிய ஆபாச இளைஞர்

சென்னை கொளத்தூரில் செவிலியர்கள் தங்கி இருந்த வீட்டின் குளியலறையில் ரகசியமாக வீடியோ எடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 46 வயது பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பெரவள்ளூர் போலீசார், செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை பகுதியைச் சேர்ந்த சத்யராஜ் என்பவரை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சத்யராஜின் செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ இருந்தது தெரியவந்தது.


