News May 8, 2024
மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

மோடியின் பேச்சு தொடர்பாக INDIA கூட்டணி கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் நாளை புகார் அளிக்க உள்ளனர். ராஜஸ்தானில் இஸ்லாமியர்கள் குறித்து மோடி பேசியது, இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்ட நிலையில், INDIA கூட்டணி சார்பாக புகாரளிக்கப்பட உள்ளது. மேலும், மோடியின் பேச்சு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் செல்வப்பெருந்தகை வழக்குத் தொடுத்துள்ளார்.
Similar News
News August 19, 2025
வார விடுமுறை.. ஸ்பெஷல் பஸ்கள் அறிவிப்பு

வார விடுமுறையையொட்டி ஆக. 22, 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு பஸ்களை TNSTC அறிவித்துள்ளது. அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து தி.மலை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கும், கோயம்பேட்டிலிருந்து நாகை, ஓசூர், பெங்களூருவுக்கும் இயக்கப்பட உள்ளன. பிற நகரங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. www.tnstc.in இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். SHARE IT.
News August 19, 2025
ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க கேமிங் மசோதா அறிமுகம்

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க மக்களவையில் கேமிங் மசோதா நாளை அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தில் ஏராளமான மோசடிகள் தொடர்ந்து அரங்கேறும் நிலையில் அதை தண்டனைக்குரிய குற்றமாக குறிப்பிட்டு PM மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் கேமிங் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரபலங்கள் ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரப்படுத்த கூடாது. இதற்கு ஏற்கனவே 28% ஜிஎஸ்டி வரி உள்ளது.
News August 19, 2025
திமுக ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி: EPS

TASMAC கடைகளில் பாட்டிலுக்கு ₹10 அதிகம் வாங்கி 4 ஆண்டுகளில் ₹22,000 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக EPS விமர்சனம் செய்துள்ளார். ‘மக்களைக் காப்போம், தமிழகம் மீட்போம்’ பரப்புரையின் 100-வது தொகுதியான காட்பாடியில் பேசி வரும் அவர், திமுக ஆட்சியில், விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளதாகவும், கொரோனா காலத்தில் மக்களை கண் இமைபோல் காத்த அதிமுக அரசை மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் என்றார்.