News January 31, 2026

ராம்நாடு: டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து

image

கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் கீர்த்தி பாபு (55) டிஎஸ்பி. இவர் குடும்பத்தினருடன் காரில் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்தார். ராமநாதபுரம் அருகே பேராவூர் பகுதியில் நேற்று காலை வந்த போது தூக்கத்தில் அவ்வழியாக சென்ற டிராக்டர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டிராக்டர் சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்தது. டிராக்டரை ஒட்டி வந்த சுப்பிரமணியன் (50) காயமடைந்தார். இது குறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் விசாரனை

Similar News

News February 6, 2026

ராமேஸ்வரம் மகா சிவராத்திரி திருவிழா ஆரம்பம்….!

image

ராமேஸ்வரம் ராமநாதபுரம் கோயிலில் மகா சிவராத்திரி கோயில் நிகழ்வு விபரம்
பிப்.8 – கொடியேற்றம்
பிப்.9 – சாமி அம்பாள் தங்க கேடயத்தில் எழுந்தருளல்
பிப்.10 – சாமி வெள்ளி பூத வாகனம், அம்பாள் வெள்ளை கிளி வாகனம்
11 நாட்கள் வரை ஓவ்வொரு வாகனத்தில் சாமி மற்றும் அம்பாள் எழுந்தருளல் நிகழ்வு
பிப்.15 – மாசி மகா சிவராத்திரி நிகழ்வு
பிப்.16 – தேரோட்டம்
பிப்.8 முதல் பிப்.19 வரை 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

News February 6, 2026

இராமநாதபுரம்: இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில், இன்று (பிப்.05) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

News February 5, 2026

ராமநாதபுரத்தில் 170 கிலோ கஞ்சா பறிமுதல்.!

image

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி காவல்துறைக்கு தொண்டி சோளியக்குடி கடல் வழியாக இலங்கைக்கு 170 கிலோ கஞ்சா மூட்டைகள் கடத்தப்படுவதாக நேற்றைய முன்தினம் தகவல் கொடுக்கப்பட்ட சோளியக்குடி கடல் வழியாக கொண்டு சென்ற கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இராமநாதபுரம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா கடத்திய கும்பலை சேர்ந்தவர்கள் கைது செய்தனர்.

error: Content is protected !!