News January 31, 2026

விழுப்புரம்: அடுத்தடுத்த அரங்கேறிய சம்பவங்கள்

image

திருவெண்ணெய்நல்லூர் அருகே சரவணம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை நடந்துள்ளது. ஜூஸ் கடை உரிமையாளர் சக்கரபாணி வீட்டில் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், 3.5 பவுன் நகை மற்றும் பணத்தைத் திருடினர். அதேபோல், தனியார் பள்ளி ஆசிரியை அபர்ணா வீட்டில் 2.5 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. ஒரே நாளில் நடந்த இந்தத் துணிகரத் திருட்டு சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 11, 2026

விழுப்புரம் கலெக்டர் அறிவித்தார்!

image

விழுப்புரம் கோட்ட விவசாயிகள் குறை கேட்கும் கூட்டம் வரும் பிப்.18ஆம் தேதி காலை நடைபெறும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் ஆர்டிஓ தலைமையில் நடைபெறும் இந்தல் கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திருவெண்ணைநல்லூர், கண்டாச்சிபுரம் தாலுக்கா விவசாயிகள் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

News February 11, 2026

விழுப்புரத்தில் துடிதுடித்து பலி!

image

செஞ்சியை அடுத்த பெருங்காயப்பூர் கோட்டிக்கல், பாறை பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி(50). தொழிலாளியான இவர், நேற்று முன் தினம் இரவு பெருங்கப்பூர் கூட்டுரோடு அருகே சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற தனியார் பஸ், அவர் மீது மோதியதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது, அவர் ஏற்கனவே இறந்ததாகத் தெரிவித்தனர்.

News February 11, 2026

விழுப்புரம் இரவு ரோந்து பணி விவரம் அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(பிப்.10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிகள் நடைபெற உள்ளன. DSP தலைமையில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். பொதுமக்கள் அவசர உதவிக்கு வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!