News January 31, 2026
பந்தலூர் அருகே புலி தாக்கி பசு பலி: நிவாரணம் வழங்கல்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட நெலாகோட்டை பகுதியில் விஜய் கிருஷ்ணன் என்பவரது பசுவைப் புலி அடித்துக் கொன்றது. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், வனச்சரகர் ரவி தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவருக்கு ₹30,000 நிவாரணத் தொகை வழங்கினர். தற்போது வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News February 18, 2026
நீலகிரி மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நீலகிரியில் 6 தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டட அனுமதி தொடர்பாக இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது சந்தேகம் ஏற்பட்டால், 9442772701 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். மேலும் சுற்றுவட்டார பகுதியில் விதிகளை மீறி கட்டப்படும் கட்டங்கள் தொடர்பாக 9442772709 என்ற மொபைல் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News February 18, 2026
வறட்சியின் பிடியில் முதுமலை: வனத்துறை எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டம் முதுமலை மற்றும் மசினகுடி பகுதிகளில் வறட்சி நிலவுவதால் பசுமை இழந்து வருகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வன விலங்குகள் உணவுக்காக சாலையோரங்களில் நடமாடிக் கொண்டிருக்கின்றன. அவ்வப்போது சாலையை கடக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. காட்டு யானை உள்ளிட்ட விலங்குகளை செல்பி போன்ற புகைப்படங்களை எடுக்க வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
News February 18, 2026
திருச்சி கொண்டு செல்லப்பட்ட ஊட்டி மலை ரயில்

நீலகிரி மாவட்டம் ஊட்டி மலை ரயிலுக்காக திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் 4 என்ஜின்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரித்து அனுப்பப்பட்டன. அந்த என்ஜின்கள் மலை ரயிலில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.ஊட்டி மலை ரயில் என்ஜின் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில் ஊட்டி மலை ரயில் என்ஜின் ஒன்று பராமரிப்பு பணிக்காக லாரியில் எடுத்துச் செல்லப்பட்டது.


