News January 31, 2026

சென்னிமலையில் வசமாக சிக்கிய திருடன்!

image

சென்னிமலை வாரச்சந்தை எதிரே நேற்று மாலை முகாசி பிடாரியூரைச் சேர்ந்த மனோகரன் (64) என்பவர் நிறுத்தியிருந்த டிவிஎஸ் வாகனத்தை மர்ம நபர் திருடினார். இதைக் கண்ட மனோகரன், சற்றும் தாமதிக்காமல் மற்றொரு வாகனத்தில் திருடனை விரட்டிச் சென்று முத்தையன் கோவில் பஸ் ஸ்டாப் அருகே மடக்கிப் பிடித்தார். பிடிபட்ட சேலம் எடப்பாடியைச் சேர்ந்த மணிவேல் (41) என்பவரை போலீசில் ஒப்படைத்தார். அவரிடமிருந்து வாகனம் மீட்கப்பட்டது.

Similar News

News February 8, 2026

ஈரோட்டில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். ஈரோடு மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0424-2214282, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free -1800 4252 441, சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)

News February 8, 2026

ஈரோடு: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக்<<>> செய்து Grievance Redressal, ஈரோடு மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க. SHARE பண்ணுங்க…

News February 8, 2026

BIG NEWS ஈரோட்டில் டெங்கு பாதிப்பு: அதிர்ச்சி தகவல்!

image

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பருவநிலை மாற்றம் காரணமாக,
காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் ஏழு பேர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நலமுடன் இருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!