News January 30, 2026

சிவகங்கை: ரூ.3.27 கோடியில் காந்தியடிகள் அரங்கம் திறப்பு

image

1927-ல் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்த மகாத்மா காந்தியடிகள், சிறாவயலில் தோழர் ப.ஜீவானந்தம் நடத்தி வந்த ஆசிரமத்திற்கு நேரில் சென்று சந்தித்தார். அதன் நினைவாக சிறாவயல் மஞ்சுவிரட்டு திடலில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ரூ.3.27 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உத்தமர் காந்தியடிகள் – தோழர் ஜீவா திருவுருவ சிலைகளுடன் கூடிய அரங்கத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார்.

Similar News

News February 10, 2026

சிவகங்கை: நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்..!

image

மானாமதுரை, கல்லல் துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.11) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் மானாமதுரை, SIPCOT, இராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூர், மிளகனூர், கட்டிக்குளம், தெ.புதுக்கோட்டை, கல்லல், சிறுவயல், குருந்தம்பட்டு, குறிச்சி, மாலைகண்டான், வெற்றியூர், சாத்தரசம்பட்டி, செம்பனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

News February 10, 2026

சிவகங்கை: 11-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

சிவகங்கை மாவட்டம், கிருங்காக்கோட்டையை சேர்ந்த பெரியண்ணன் மகள் தர்ஷிகா (16). இவர் முட்டாக்கட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மாணவி அடிக்கடி செல்போன் பார்ப்பதை பெற்றோர்கள் கண்டித்ததால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிங்கம்புணரி போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 10, 2026

சிவகங்கை: ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் செயல்பட்டு வரும், வட்டார இயக்க மேலாண்மை அலகில், ஒப்பந்த அடிப்படையில் வட்டார ஒருங்கிணைப்பாளராக பணியாற்ற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.sivaganga.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி நேற்று தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு <>க்ளிக்<<>> செய்யவும். SHARE IT.

error: Content is protected !!