News May 8, 2024
சித்தன்னவாசல் குடைவரைக் கோயில் சிறப்பு!

உலகப்புகழ் பெற்ற சித்தன்னவாசல் சமண குடைவரைக் கோயில் புதுக்கோட்டையில் அமைந்துள்ளது. இந்த சமண குடைவரைக் கோயிலில் 7-8ஆம் நூற்றாண்டை சேர்ந்த சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது. இதில் வரையப்பட்ட சித்திரங்கள் தாவரங்களில் இருந்து பெற்றப்பட்டவை. சரியான பராமரிப்பின்றி இருந்த இக்குகையில் ஓவியங்கள் மங்கத் தொடங்கியது. 1990களில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது.
Similar News
News August 29, 2025
புதுகை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று(ஆக.28) இரவு 10 மணி முதல் இன்று(ஆக.29) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம். அல்லது 100ஐ அழைக்கவும். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்.
News August 28, 2025
புதுகை மக்களே.. இலவச சட்ட உதவிகள் வேண்டுமா?

புதுகை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு புதுகை மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04322-220585) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!
News August 28, 2025
புதுக்கோட்டை மக்களே.. இலவச வீட்டு மனை வேண்டுமா?

புதுகை மக்களே… தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வீடு மற்றும் நிலம் இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்ட இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை (4322-221663) தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணவும்.