News January 30, 2026
கிருஷ்ணகிரி: குடியால் பறிபோன உயிர்!

தருமபுரியை சேர்ந்த கூலி தொழிலாளி மாதேஷ் (39). இவர் ஓசூரில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு தொடர் குடி பழக்கம் இருந்தது. இந்நிலையில் நேற்று (ஜன.29) அக்ரஹாரம் பகுதியில் நடந்து செல்லும் போது திடீரென மயங்கி விழுந்தார். இவரை அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை உயிரிழந்தார். இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 7, 2026
கிருஷ்ணகிரியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கம்!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் “வணிக சந்திப்பு” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சி. தினேஷ் குமார் ஐ.ஏ.எஸ். பங்கேற்று, மகளிர் தயாரிப்புகளை பார்வையிட்டு சந்தை வாய்ப்புகள் குறித்து ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சி மூலம் மகளிர் தொழில் வளர்ச்சிக்கு புதிய ஊக்கம் கிடைத்தது.
News February 7, 2026
கிருஷ்ணகிரி: G Pay பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News February 7, 2026
கிருஷ்ணகிரி: CERTIFICATES வாங்க HI போடுங்க!

கிருஷ்ணகிரி மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!


