News January 30, 2026

சென்னை ஏரிகளின் தற்போதைய நிலவரம்!

image

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான ஏரிகளின் இன்றைய நீர் இருப்பு விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி பூண்டி ஏரி தனது முழு கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியை எட்டியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 3363 மி.கன அடியும், புழல் ஏரியில் 3032 மி.கன அடியும் நீர் இருப்பு உள்ளது. சோழவரம் ஏரியில் 536 மி.கன அடியும், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரியில் 422 மி.கன அடியும், வீராணம் ஏரியில் 914 மி.கன அடி நீர் உள்ளது.

Similar News

News February 4, 2026

2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு ரூ.10.354 கோடி நிதி ஒதுக்கீடு

image

சென்னை மெட்ரோவின் 2-ஆம் கட்டத் திட்டத்திற்கு, மத்திய அரசு ரூ.10.354 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. மாதவரம்-சிறுசேரி வழித்தடத்தில், OMR மேம்பால பாதையில், ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள், தற்போது தொடங்கப்பட்டுள்ளன. ரூ.63.246 கோடி மதிப்பிலான, இந்த திட்டப் பணிகள், தீவிரமாக நடந்து வருகிறது. இத்தகவலை சென்னை மெட்ரோ தலைமையகம் இன்று (பிப்.04) அறிவித்துள்ளது.

News February 4, 2026

சென்னை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில்<> cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News February 4, 2026

சென்னை: தூக்கில் தொங்கிய மாணவன்

image

கோயம்பேடு அன்னம்மா நகர் 2-வது தெருவைச் பிரவீன் (19) ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். 2-ம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில் வீட்டில் பூட்டிய கதவை நீண்ட நேரமாக திறக்காததால் சதேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். * தற்கொலை எதற்கும் தீர்வல்ல*

error: Content is protected !!