News January 30, 2026

அவிநாசி அருகே விபத்து: இளைஞர் பலி

image

அவிநாசி சின்னேரிபாளையத்தைச் சேர்ந்த மொபைல் கடை உரிமையாளர் சுரேஷ் (27), கோவையிலிருந்து திரும்பும்போது தனது காரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் பலத்த காயமடைந்த அவர், திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவிநாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 18, 2026

திருப்பூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே கிளிக்<<>> செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News February 18, 2026

திருப்பூரில் 2 பேர் அதிரடி கைது!

image

திருப்பூர் வடக்கு பகுதியில் முத்தாரம்மன் கோவில் அருகே குட்கா பொருட்கள் வைத்திருந்ததாக, பாஸ்கரம் ஷா என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 4.3 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் ரயில் நிலையம் அருகே பெண் ஒருவரிடம் இருந்து 2.1 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அவரையும் கைது செய்துள்ளனர்.

News February 17, 2026

திருப்பூர்: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க

error: Content is protected !!