News January 30, 2026
தருமபுரியில் 3 குழந்தைகளின் தாய் விபரீத முடிவு!

நாகமரை கிராமத்தை சேர்ந்த மீனவர் பாலகிருஷ்ணன் (39). இவரது மனைவி கலைவாணி (29). தளபதிக்கு 1 மகன் மற்றும் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக உடல்நல குறைவால் அவதிப்பட்ட கலைவாணி கடந்த 28-ந் தேதி மாலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஏரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 8, 2026
தருமபுரியில் ஆட்சியர் ஆய்வு!

தருமபுரி பேருந்து நிலையம் திறந்து வைத்ததை தொடரந்து பொதுமக்கள் அனைவரும் அனைத்து மாவட்டங்களுக்கும் மற்றும் அனைத்து ஊர்களுக்கும் பயனம் செய்வதற்கு ஏதுவாக அனைத்து விதமான ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை நான்கு ரோடு சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் சதீஸ் இன்று (பிப்.7) ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசு துறை அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
News February 8, 2026
தருமபுரி: தூக்கி வீசப்பட்ட மாணவன் பலி!

பாலக்கோடு குப்பன் கொட்டாயை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் ஹரி பிரசாந்த் அப்பகுதியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சாலையை கடக்கும்போது அவ்வழியாக வந்த லாரி மோதி தலையில் பலத்த காயமடைந்தார். அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில் நேற்று (பிப்.7) மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 8, 2026
தருமபுரியில் தூக்கிட்டு தற்கொலை; கதறும் குடும்பம்!

காளேகவுண்டனூரை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி (55). இவருடைய 2 பிள்ளைகள் வெளிநாட்டில் பணிபுரியும் நிலையில் இவர் மனைவியுடன் வீட்டில் வசித்து வந்தார். சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த இவர் சம்பவத்தன்று மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து பென்னாகரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


