News January 30, 2026
சென்னை: உள்ளாட்சிகளுக்கு பெரும் நெருக்கடி

பள்ளிக்கரணை சதுப்புநிலங்கள் சுற்றி 1 கி.மீ. வரை கட்டடம் கட்ட விதிக்கப்பட்ட தடை நீடிப்பதால், சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம் உள்ளிட்ட 16 கிராமங்களில் கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன. இதனால், அனுமதிக் கட்டணமாக ரூ.1 – ரூ.20 லட்சம் வரை செலுத்திய விண்ணப்பதாரர்கள், பணத்தைத் திரும்பக் கேட்டு உள்ளாட்சிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். உத்தரவு வந்தபின் பணம் திருப்பித் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 7, 2026
சென்னை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

சென்னையில், மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் முகாம் (PM National Apprenticeship Mela) வருகிற 09.02.2026 அன்று நடைபெற உள்ளது. காலை 9.30 மணியளவில் கிண்டி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் அசல் சான்றிதழ் உடன் பங்கேற்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க
News February 7, 2026
சென்னை: கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

கொடுங்கையூர் மீனாம்பாள் சிவரான் தெருவில் வசிப்பவர் நசீமா பேகம். கணவரை பிரிந்து தனது மகன் பசுருல்லா (23) உடன் தனியாக வசித்து வந்தார். இவர், கொடுங்கையூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் உள்ள அறையில் தூங்க சென்ற பசுருல்லா, மின்விசிறியில் தாயின் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 7, 2026
சென்னையில் இன்று இங்கெல்லாம் மின்தடை!

சென்னையில் முக்கிய பகுதிகளில் இன்று (பிப்.07) மின் தடை ஏற்பட உள்ளது. அதன்படி திருமுடிவாக்கம், காரம்பாக்கம், அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், பெருங்களத்தூர், முடிச்சூர், ஸ்டான்லி, விருகம்பாக்கம், மாதவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. உங்க ஏரியா இருக்கிறதா என்பதை <


