News January 30, 2026

மதுரை: பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் சடலம்

image

மதுரை, யாகப்பா நகரை சேர்ந்தவர் மோகன்(59). இவர் மனைவி இறந்த நிலையில் (குழந்தைகள் இல்லாதவர்) வழிப்பு, மூல நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவரது அண்ணன் கணேசன் வீட்டில் தங்கியிருந்தார். அண்ணன் வீட்டார் குடும்பத்துடன் சென்னை சென்ற நிலையில் பூட்டியிருந்த வீட்டில் துர்நாற்றம் வீசியது. இந்த புகாரின் பேரில் போலீசார் கதவை உடைத்து பார்த்த போது மோகன் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.

Similar News

News February 9, 2026

FLASH மதுரை: முகத்தை சிதைத்து கொன்ற கொடூரம்

image

திருவாதவூர் அருகே உலகுபிச்சன்பட்டியை சேர்ந்த ராஜ்குமார்(31) மாணிக்கம்பட்டி பகுதியில் உள்ள உடைகல் குவாரி பள்ளத்தில் முகத்தில் வெட்டு காயங்களுடன் நேற்று மாலை கொலை செய்யப்பட்டு கிடந்தார். சென்ட்ரிங் வேலை பார்த்து வந்த இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பெண் தொடர்பு காரணமாக இக்கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கொலை தொடர்பாக சிலரை பிடித்து மேலூர் போலீசார் இன்று விசாரித்து வருகின்றனர்.

News February 9, 2026

மதுரை: நாளைய மின்தடை பகுதிகள்

image

மதுரை, குலமங்கலம், பி.பி.குளம் பகுதியில் நாளை (பிப்.10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை. நாராயணபுரம், ஆத்திகுளம், ஐயர்பங்களா, வள்ளுவர் காலனி, விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகர், சிவக்காடு, முல்லை நகர், குலமங்கலம், கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம், பி.பி.குளம், மருது பாண்டியர் நகர் என மின் சேர் பொறியாளர் தெரிவித்துள்ளார். மேலும் உள்ள மின்தடை பகுதிகளை காண <<19089541>>CLICK<<>> *SHARE

News February 9, 2026

மதுரை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்

image

மதுரை வாசிகளே! பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது மதுரை மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம் . தொடர்புக்கு 0452 – 2580259. SHARE பண்ணுங்க!

error: Content is protected !!