News January 30, 2026
புதுகை: மீனவர்களுக்கு கலெக்டர் கடும் எச்சரிக்கை

புதுகை மாவட்டம், கட்டுமாவடி முதல் ஏனாதி வரை ஜனவரி மாதம் முழுவதும் கடல் ஆமைகள் மற்றும் கடல் பசுக்கள் இனப்பெருக்க காலமாகும். அவைகள் கரை ஒதுங்கும் பொழுது மீனவர் வலையில் சிக்கினால், அதனை விடுவிக்க வேண்டும் அப்படி விடுவிக்காமல் அதனை எடுத்துச் சென்றால் அவர்கள் மீது, தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 திருத்தம் 2016 படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
Similar News
News February 13, 2026
புதுக்கோட்டை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

புதுக்கோட்டை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News February 13, 2026
புதுக்கோட்டை: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். இத்தகவலை SHARE பண்ணுங்க!
News February 13, 2026
புதுகை: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கலெக்டர் அருணா!

புதுகை மாவட்டத்தில் 02.08.2025 முதல் தற்போது வரை 39 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். மேலும் இந்த முகாமில், 56,614 பேர் பயனடைந்துள்ளதாகவும், முகாமில் சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், மனநலம் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டவர்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


