News January 30, 2026
கோவை: தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை!

கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (20). இவரது தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இதனால் பாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 17, 2026
மேட்டுப்பாளையத்தில் யானை பலி

மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், இன்று காலை சுமார் 25-வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டது. 2 ஆண் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட கடும் மோதலில் காயம் அடைந்து இந்த யானை உயிரிழந்திருப்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், இதுகுறித்து வனச்சரக அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News February 17, 2026
BREAKING: கோவை: அதிமுகவில் ஐக்கியமான பிரபலம்!

இந்திய ஜனநாயக கட்சியின் மாநில இணை பொதுச்செயலாளராக பணியாற்றிய மார்ட்டினின் மனைவியும், தவெக முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவின் மாமியாருமான லீமா ரோஸ் மார்ட்டின் இன்று அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ்ஸை சென்னை பசுமைவழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் சென்று அதிமுகவில் இணைந்தார். இந்நிகழ்வின் போது EX அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
News February 17, 2026
கோவை: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க


