News January 29, 2026

குறள் வார விழா போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்!

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் குறள் வார விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், இன்று (29.01.2026) அவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டுகளை தெரிவித்தார். இதில் அரசு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பங்கேற்பு சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.

Similar News

News January 31, 2026

FLASH: சின்னசேலத்தில் பயங்கர விபத்து!

image

சேலம் மாவட்டம் புளியங்குறிச்சியைச் சேர்ந்த லோகநாதன், சின்னசேலம் அரசுப் போக்குவரத்து பணிமனையில் நடத்துனராகப் பணியாற்றி வந்தார். இன்று பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது, வாசுதேவனூர் தனியார் கல்லூரி அருகே எதிர்பாராதவிதமாக கண்டெய்னர் லாரி மீது மோதினார். இந்த கோர விபத்தில் லோகநாதன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 31, 2026

கள்ளக்குறிச்சி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

கள்ளக்குறிச்சி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது.தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார்.இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 31, 2026

கள்ளக்குறிச்சி: ஒரே கேள்வி; உயிரை மாய்த்துக்கொண்ட சிறுமி

image

உப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரி (17) 7ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். வீட்டு வேலை செய்யவில்லை என அவரது அம்மா ராஜகிளி திட்டியதால் கடந்த 18-ம் தேதி மகேஸ்வரி கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!