News January 29, 2026
வடலூர் தைப்பூச திருவிழா; சிறப்பு ரயில் அறிவிப்பு

கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் வருகின்ற பிப்ரவரி 1 ஆம் தேதி தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பிப்ரவரி 1, பிப்ரவரி 2, பிப்ரவரி 3 ஆகிய 3 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் விருத்தாசலம், ஊத்தாங்கள்மங்கலம், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவித்துள்ளது.
Similar News
News February 2, 2026
கடலூர்: லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த வலசக்காடு பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி மதிவாணன் (45). இவர் நேற்று தனது பைக்கில் எறும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே சென்றபோது, அவ்வழியே வந்த லாரி ஒன்று பைக் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய மதிவாணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 2, 2026
கடலூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (பிப்.01) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.02) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம்,விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
News February 2, 2026
கடலூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (பிப்.01) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.02) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம்,விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது


