News January 29, 2026
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (29.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News February 9, 2026
கோவை: ரயில்வேயில் வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1) மொத்த காலிப்பணியிடங்கள்: 22,195
2) வயது வரம்பு: 18 – 33
3) கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி
4) எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
கணினி தேர்வு, உடல் திறன் சோதனை, ஆவண சரிபார்ப்பு, மருத்துவச் சோதனை.
5) விண்ணப்பிக்கும் இணையதளம்: www.rrbapply.gov.in
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 2, 2026
மேலும், விவரங்களுக்கு <
News February 9, 2026
கோயம்புத்தூரில் மர்ம மரணம்! பரபரப்பு

சத்தியைச் சேர்ந்தவர் எபினேசர். இவர் கோவையில் சாலையோரம் தங்கி, கிடைக்கும் வேலைகளைச் செய்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் ராமநாதபுரம் மேம்பாலத்தின் அடியில் எபினேசர் பலத்த காயங்களுடன் கிடந்தார். உடனடியாக அவரை மீட்ட மக்கள், சிகிச்சைக்காக GH-க்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் உயிரிழந்தார். இது கொலையா? பாலத்தில் இருந்து தவறி விழுந்தாரா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News February 9, 2026
கோவையில் சோகம்: ஓராண்டில் 72 உயிர்கள் பலி

தமிழகத்தின் 2-வது பெரிய ரயில் நிலையமாக கோவை ரயில் நிலையம் இருந்து வருகிறது. கோவையில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் நிலையத்தை நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஓராண்டில் மட்டும் அஜாக்ரதையாக தண்டவாளத்தை கடத்தல், செல்போன் பேசிக்கொண்டு கடந்து செல்வது உள்ளிட்ட காரணங்களால் 72 பேர் பலியாகி உள்ளனர்.


