News January 29, 2026

தென்காசி: பேருந்தில் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு

image

தமிழக அரசு பேருந்துகளில், தொலைதூர பயணம் மேற்கொள்ளும் போது, அல்லது நகர பேருந்துகளில் நீங்கள் பயணிக்கும் போது பேருந்திலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து விட்டு, இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும். உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 14, 2026

தென்காசி: தேர்வு இல்லாமல் போஸ்ட் ஆபிஸ் வேலை.. APPLY

image

தென்காசி மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000 – 29,380 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.

News February 14, 2026

தென்காசி: பெண் ஊழியர் பாலியல் வழக்கில் வாலிபருக்கு சிறை

image

பாவூர்சத்திரம் ரயில்வே கேட் கீப்பராக 2023ல் பணிபுரிந்த பெண் ஊழியரை மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். அவரிடமிருந்து தப்பிய பெண் ரயில்வே போலீசில் புகாரளித்தார். விசாரணையில் அவர் கேரளாவை சேர்ந்த அனீஸ் (27) என்பது தெரியவந்தது. இந்த வழக்கு நேற்று தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அனீசுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

News February 14, 2026

தென்காசி: கடையம் அருகே ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

image

கடையம் அருகே பிள்ளைகுளம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். கூலி தொழிலாளியான இவர் சில மாதங்களுக்கு முன் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றிருந்தார். ஆனால் மதுபழக்கத்தை விட முடியவில்லை எனக்கூறி மீண்டும் மது குடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த கடையம் போலீசார் அவரது உடலை மீட்டு தென்காசி GH-க்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!