News January 29, 2026

போன் ஒட்டுக்கேட்பு வழக்கில் Ex CM-க்கு நோட்டீஸ்

image

தெலங்கானாவில் அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் போன்கள் ஒட்டுக்கேட்பு வழக்கை சிறப்பு புலனாய்வு குழு (SIT) விசாரித்து வருகிறது. இதில், ஏற்கெனவே Ex-CM சந்திரசேகர ராவின் மகன் KTR-டம் 8 மணிநேரம் SIT கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியது. இந்நிலையில் சந்திரசேகர ராவிடம் விசாரணை நடத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிக்கு நிதி பெற்றது பற்றியும் நாளை அவரிடம் விசாரிக்கப்படவுள்ளது.

Similar News

News February 12, 2026

மகளிர் உரிமைத் தொகை.. முக்கிய அப்டேட்

image

மகளிருக்கு மாதந்தோறும் ₹1,000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இதனிடையே, விதிகளின்படி 5 ஏக்கர் நன்செய், 10 ஏக்கர் புன்செய் நிலம் வைத்திருப்பவர்கள் இதில் பயன்பெறும்போது, IT தாக்கல் செய்தாலும், அதிகக் கடனில் வாழும் தங்களையும் இத்திட்டத்தில் இணைக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்தனர். ஆனால், திட்ட விதிகள், பலகட்ட பரிசீலனைகளுக்கு பிறகே தகுதியானவர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 12, 2026

வடகொரியாவின் அடுத்த தலைவர் இவர் தானா?

image

வட கொரியாவின் அடுத்த தலைவராக கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜு ஏ பதவியேற்கலாம் என்று தென் கொரிய உளவுத்துறை(NIS) தெரிவித்துள்ளது. மகளை தனது அரசியல் வாரிசாக அறிவிக்க கிம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. சமீபத்திய ராணுவ சுற்றுப்பயணங்களில் கிம் ஜு ஏ பங்கேற்றதும், கொள்கை முடிவுகளில் அவரது கருத்துகளும் இதை வலுப்படுத்துகின்றன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

News February 12, 2026

1,00,00,00,00,000 ரூபாய் சரிந்தது.. அம்மாடியோவ்

image

2020-க்கு பிறகு முதல்முறையாக TCS-ன் சந்தை மதிப்பு ₹10 லட்சம் கோடிக்கும் கீழ் சரிந்துள்ளது. பங்கு சந்தையில் கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு பிப்ரவரி 12-ல் சந்தை மதிப்பு 5.5% ஆக சரிந்தது. <<19050261>>AI-ன் தாக்கத்தால்<<>> சாப்ட்வேர் நிறுவனங்களின் எதிர்காலம் குறித்த கவலையில் முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை திரும்ப பெற்று வருகின்றனர். இதனால், ஐடி துறையில் வேலைவாய்ப்பு, பிசினஸ் பாதிக்கும் என அச்சம் எழுந்துள்ளது.

error: Content is protected !!