News January 29, 2026
கோவை: மனைவியின் மண்டையை உடைத்த கணவர்

கோவை, உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி ஹேமலதா. இவர் கடந்த 21-ம் தேதி உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க ஒண்டிப்புதூர் சென்று விட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பி உள்ளார். அப்போது, வீட்டில் குருமூர்த்தி இல்லை. பின், மது போதையில் வந்த அவரிடம் ஹேமலதா கேள்வி கேட்க அவரை கட்டையால் மண்டையை உடைத்துள்ளார். புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
Similar News
News February 7, 2026
கோவை: இலவச வீடு.. எப்படி விண்ணப்பிக்கலாம்

ஏழைகளின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆதார், வங்கி கணக்கு விவரம், பட்டா, சிட்டா, வருமானச் சான்று ஆகியவை முக்கியம் ஆகும். (Share)
News February 7, 2026
கோவை அருகே குழந்தை உயிரிழப்பு

கோவையைச் சேர்ந்த சுதா என்பவருக்கு திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. அவருக்கு, அவரது தங்கை கவிதா ஒரு யோசனை கூறியுள்ளார். அதன்படி, அங்குள்ள ஒரு திருமணமாகாத பெண்ணுக்கு கடந்த 4-ம் தேதி பிறந்த குழந்தையை, ஒரு செவிலியர் உதவியுடன் சுதாவிற்கு பெற்று தந்துள்ளார். ஆனால், குழந்தை பேச்சு மூச்சின்று இருந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 7, 2026
POWER CUT: கோயம்புத்தூரில் இங்கெல்லாம் மின்தடை

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (பிப்.7) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, வெரைட்டி ஹால் ரோடு, தியாகி குமரன் மார்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம் ஒரு பகுதி, உக்கடம் ஒரு பகுதி, கலெக்டர் அலுவலகம், கோவை ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, லாரிப்பேட்டை, பீடம்பள்ளி, கலங்கல், பாப்பம்பட்டி, கண்ணம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


