News January 29, 2026

2015-ல் வந்தது செயற்கை வெள்ளம்: CM ஸ்டாலின்

image

சென்னை பெருநகரில், ₹6,495 கோடியில் மழை நீர் வடிகால் பணி நடைபெற்று வருவதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் சென்னையில் 2015-ல் செயற்கை வெள்ளம் உருவாக்கப்பட்டதாக கூறிய அவர், தற்போது இயற்கை எவ்வளவு மழை தந்தாலும் சமாளிக்கும் ஆற்றலை சென்னைக்கு உருவாக்கி உள்ளோம் என்றார். மேலும், மக்களின் தேவையை புரிந்துகொண்டு மெட்ரோ வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தது திமுக அரசுதான் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 13, 2026

ஜோதிடரின் பேச்சை கேட்டு தாயை கொலை செய்த பெண்!

image

ஜோதிடரின் பேச்சை நம்பிய பெண் ஒருவர் தாயை கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. சுசித்ரா(33) என்பவரின் தந்தை 18 மாதங்களுக்கு முன் மரணமடைந்துள்ளார். ஜோதிடர் ஒருவர் தாயாரே சூனியம் வைத்து தந்தையை கொலை செய்ததாக கூறியுள்ளார். இதை நம்பிய சுசித்ரா, தாயார் தூங்கி கொண்டிருந்த போது தலையணையால் அழுத்தி கொலை செய்துவிட்டு நாடகமாடியுள்ளார். ஆனால், போலீசாரின் விசாரணையில் உண்மை வெளிவந்துவிட்டது.

News February 13, 2026

கூட்டணி கட்சிக்கு எதிராகவே கருத்து சொன்ன வைகோ

image

கூட்​ட​ணி​யில் உள்ள ஒவ்​வொரு கட்​சியும் ஒவ்வொரு கருத்தை சொல்லி வருவதாக வைகோ கூறியுள்ளார். ஆட்​சி​யில் பங்கு, அதிக இடங்​கள் வேண்​டும் என்று கேட்பது அவர​வர் உரிமை என்ற அவர், ஆனால் தனிப்​பெரும்​பான்மை பெற்று திமுக ஆட்சி அமைக்​கும்​போது காங்கிரஸின் இந்த கோரிக்​கை​கள் எல்​லாம் எடு​ப​டாது, ஏற்​கப்​ப​டாது என்றார். மேலும், மதிமுக இதுபோல எவ்​வித நிபந்தனையும் விதித்ததில்லை என தெரிவித்துள்ளார்.

News February 13, 2026

வெறும் நாணயங்கள் அல்ல.. நினைவுகள்!

image

மேலே உள்ள போட்டோவில் இருப்பவை, ₹2 காசு முதல் ₹25 காசு வரையிலான நாணயங்கள் ஆகும். இவையெல்லாம், இப்போது புழக்கத்தில் இல்லை என்றாலும், 1990ல் பிறந்தவர்களின் மறக்க முடியாத நினைவுகள். கமர்க்கட்டு, விரலில் மாட்டிக் கொள்ளும் சுத்து மிட்டாய், தேன் மிட்டாய், பட்டாணி என அப்போதெல்லாம் சுவைத்தவை நினைவிற்கு வந்து போகிறது. நீங்கள் குழந்தையாக இருந்தபோது இந்த நாணயங்கள் இருந்ததா? உங்கள் நினைவுகளை சொல்லுங்க.

error: Content is protected !!