News January 29, 2026
தாம்பரம் ஊர்க்காவல் படையில் விண்ணப்பம் துவக்கம்

தாம்பரம் மாநகர ஊர்க்காவல் படையில் 29 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 32 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல் 45 வயதுடைய, குற்றப்பின்னணி இல்லாத தாம்பரம் பகுதி மக்கள் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜன-31 மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9952255493, 7418375910 அழைக்கலாம்.
Similar News
News February 10, 2026
செங்கை: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News February 10, 2026
செங்கல்பட்டில் பம்புசெட்டு அமைக்க 70% மானியம்!

செங்கல்பட்டு மக்களே, தமிழ்நாடு அரசு, ‘முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்’ கீழ் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை வழங்குகிறது. அத்துடன், 5 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும். இதில் பயனடைய விரும்பும் நபர்கள், இங்கு <
News February 10, 2026
செங்கையில் தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு

செங்கல்பட்டு: மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் தனியார் நிறுவனங்களில் பாதுகாப்பு பணியில் உள்ள காவலாளிகளுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி தொடங்கியுள்ளது. நேற்று முதல் 18ம் தேதி வரை, காலை 10 மணி முதல் 1.30 மணி வரை 10 நாட்கள் பயிற்சி நடைபெறும். இதில் பங்கேற்க விரும்புவோர் அருகிலுள்ள தீயணைப்பு நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டும். பயிற்சி முடிவில் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்


